ஜெயங்கொண்டம்,ஏப்.22: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கட்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (31) கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் வேலைக்கு செல்லும் பெற்றோர்களை பார்த்துவிட்டு வந்து ஆள் இல்லாத வீட்டிற்குள் சென்று 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் சில்மிஷம் செய்த மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் கூலி தொழிலாளி கைது appeared first on Dinakaran.